கிருஷ்ணா கால்வாயில் பழங்கால சிலைகள் கண்டெடுப்பு
2022-03-11@ 00:10:28

திருவள்ளூர்: கிருஷ்ணா கால்வாயில் பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் அடுத்த காக்களூர் கிருஷ்ணா கால்வாயில் செல்லும் நீர் வழித்தடத்தில் பழங்கால அம்மன் சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் வட்டாசியர் ஏ.செந்தில்குமார் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் அருணா, வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணா கால்வாயில் சோதனையிட்டனர். அப்போது 2 அடி உயர அம்மன் கற்சிலை, 2 அடி உயரம் கொண்ட சிமென்டினால் ஆன பழங்கால அம்மன் சிலை மற்றும் சிங்கம் கற்சிலை ஆகிய 3 பழங்கால சிலைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே 3 சிலைகளையும் மீட்டு போலீசார் உதவியுடன் திருவள்ளூர் கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்து சீல் வைத்தனர். மேலும் இந்த சிலைகளின் பழமை தன்மையை அறிய சோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாக திருவள்ளுவர் வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
கோவை நகைக்கடையில் ரூ.55 லட்சம் நகை மோசடி ‘ஆன்லைன் ரம்மி’யில் இழந்த சூபர்வைசரிடம் விசாரணை
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைப்படி பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
கி.மு. 300 முதல் 10-ம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு காலகட்டங்களில் உருவானது கீழடி நகரம்; மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தகவல்
கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’
பலகோடி மோசடி செய்த உரிமையாளர்கள் தலைமறைவு; ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை காட்பாடி அருகே சோகம்
1.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!