தீவிர அரசியலில் இருந்து விலகல்: ஏ.கே.அந்தோணி அறிவிப்பு
2022-03-10@ 00:42:20

புதுடெல்லி: முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஏ.கே. அந்தோணியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் வரும் 2ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ எனக்கு தற்போது 81 வயதாகிறது. உடல் நிலையும் சரியில்லை. கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மாநிலங்களவைக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன். பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சொந்த மாநிலமான கேரளாவில் சென்று தங்க உள்ளேன். இனி தீவிர அரசியலில் ஈடுபட மாட்டேன். ஆனால், மாநில அரசியலில் கவனம் செலுத்த உள்ளேன்,’’ என்றார்.
கடந்த 1970ம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி 1977, 1995, 2001ம் ஆண்டு என மூன்று முறை கேரள முதல்வர் பதவி வகித்துள்ளார். 5 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாதுகாப்பு துறை உட்பட பல்வேறு முக்கிய ஒன்றிய துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார்.
மேலும் செய்திகள்
விமானத்தில் இருந்து இறங்கி ஓடுபாதையில் நடந்து சென்ற பயணிகள்; பேருந்து வர தாமதம்
பக்தர்கள் வருகை குறைந்தது அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
`இந்தியாவில் குணமடையுங்கள்’மருத்துவ சுற்றுலா தகவல்தளம் ஆக.15ல் தொடங்க ஒன்றிய அரசு திட்டம்
போலீசை சிறைபிடித்த பாஜ பிரமுகர் மீது வழக்கு
இன்று பிரிவு உபசார விழா துணை ஜனாதிபதியுடன் ஜெகதீப் தன்கர் சந்திப்பு
40 கிலோ வெடிபொருளை சுமக்கும் எல்லை பாதுகாப்பில் நவீன டிரோன்கள் எச்ஏஎல் நிறுவனம் தயாரிப்பு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!