திருவள்ளூர் நகராட்சி பள்ளியில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆய்வு
2022-03-09@ 00:12:13

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலை பள்ளியில் நேற்று வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வகுப்பறைக்கு சென்று பள்ளி கட்டிடங்கள் உறுதித் தன்மையுடன் உள்ளதா என பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் நகராட்சி அங்கன்வாடி மையத்தை நேரில் ஆய்வு செய்து குழந்தைகளுக்கு வழங்குவதற்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த மதிய உணவை எடுத்து சாப்பிட்டு சோதனை செய்தார். மேலும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போதிய இட வசதி இன்றி தரையில் அமர்ந்து இருப்பதை அறிந்து விரைந்து மேஜை நாற்காலி வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது நகர செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான சி.சு.ரவிச்சந்திரன், நகர்மன்ற தலைவர் பா.உதயமலர் பொன்பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் வி.இ.ஜான், டி.கே.பாபு, டி.செல்வகுமார், விஜயகுமார், அயூப் அலி, கு.பிரபாகரன், சாந்தி கோபி, நீலாவதி பன்னீர்செல்வம், பத்மாவதி ஸ்ரீதர், இந்திரா பரசுராமன், தனலட்சுமி சீனிவாசன், கமலி மணிகண்டன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Tags:
Tiruvallur Municipal School VG Rajendran MLA Study திருவள்ளூர் நகராட்சி பள்ளி வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆய்வுமேலும் செய்திகள்
தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் படிப்படியாக வேகம் பிடித்துள்ளது: பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மாற்று அறுவை சிகிச்சை அல்லாத உறுப்புகளை மீட்டெடுக்கும் மையங்களாக செயல்பட உள்ளன
திருச்சுழி அருகே சேதமடைந்துள்ள சுகாதார நிலையத்தை சீரமைக்க கோரிக்கை
காட்பாடியில் இன்று வீடுகளில் குப்பை சேகரிப்பு பணியை கலெக்டர் திடீர் ஆய்வு
மதுரை திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவமனைக்கு ரூ.60 கோடியில் புதிய கட்டிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயிலில் ஆடித் தேரோட்டம்
இன்டர்நெட் மூலம் தோழிகளை விலை பேசிய கல்லூரி மாணவி
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...