பயிர் இன்சூரன்ஸ் கிடைக்காத விரக்தி செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்-திருவாரூர் அருகே பரபரப்பு
2022-03-01@ 14:34:45

முத்துப்பேட்டை : திருவாரூர் அருகே பயிர் இன்சூரன்ஸ் தொகை கிடைக்காத விரக்தியில் செல்போன் டவர் மீது ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர்-சங்கேந்தி பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன்(46). விவசாயியான இவர், சாகுபடி செய்த பயிருக்கு 2021-22ம் ஆண்டுக்கான காப்பீட்டு தொகை செலுத்தியிருந்தார். ஆனால் இவருக்கு வரவேண்டிய காப்பீட்டு தொகை கிடைக்க வில்லை. அதே பகுதியை சேர்ந்த 56 பேருக்கும் விடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்திருந்தனர். விவசாய செலவிற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த வழியின்றி தவித்த விவசாயி கலைச்செல்வன், அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் காப்பீட்டு தொகை கிடைக்க வில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் அதே பகுதியில் உள்ள 100 அடி செல்போன் டவர் மேல் ஏறி உச்சிக்கு சென்ற கலைச்செல்வன், தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார். இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.
இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். எடையூர் இன்ஸ்பெக்டர் பத்மநாபன், விஏஓ புருஷோத்தமன், ஊராட்சி தலைவர் ராஜா மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள், விரைவில் பயிர் காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் 2.30மணியளவில் கலைச்செல்வன் கீழே இறங்கி வந்தார். பின்னர் போலீசார் அவரை எடையூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் செய்திகள்
கோவை நகைக்கடையில் ரூ.55 லட்சம் நகை மோசடி ‘ஆன்லைன் ரம்மி’யில் இழந்த சூபர்வைசரிடம் விசாரணை
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைப்படி பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
கி.மு. 300 முதல் 10-ம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு காலகட்டங்களில் உருவானது கீழடி நகரம்; மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தகவல்
கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’
பலகோடி மோசடி செய்த உரிமையாளர்கள் தலைமறைவு; ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை காட்பாடி அருகே சோகம்
1.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!