ஊத்துக்கோட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம்
2022-03-01@ 00:46:40

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. ஊத்துக்கோட்டையில் அரிமா சங்கம் சார்பில் ஊத்துக்கோட்டை அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில், அரிமா சங்க தலைவர் டி.பி.துளசிராம் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.கதிரவன், பொருளாளர் கே.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் அஞ்சு, கிரண் தலைமையில் 17 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் கண் புரை, கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட கண் சம்மந்தப்பட்ட பல்வேறு நோய்களுக்கு 300 பேருக்கு சிகிச்சை அளித்தனர். இதில், அறுவை சிகிச்சைக்காக 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர், அரிமா சங்கம் சார்பில், ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 3 மெத்தைகள், லச்சிவாக்கம் ஊராட்சி பெரம்பூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2 மெத்தைகள் என 5 மெத்தைகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், அரிமா சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் மழைநீர் வடிகால்வாயில் கழிவுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவன் போலீசில் சரண்
கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் ஊராட்சியில் டவர் அமைக்க எதிர்ப்பு; இடத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
6 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் விவசாய சங்க மாநில தலைவர் கலந்துரையாடல்; நீதமன்றத்தில் வழக்கு தொடர முடிவு
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!