தமிழர்களும், மலையாளிகளும் ஒரே மண்ணின் குழந்தைகள்; நாங்கள் சகோதர, சகோதரிகள்: உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் பினராயி விஜயன் பேச்சு
2022-02-28@ 18:05:17

சென்னை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன்; தமிழர்களும், மலையாளிகளும் ஒரே மண்ணின் குழந்தைகள்; நாங்கள் சகோதர, சகோதரிகள். இளைஞரணி தலைவராக இருந்து மாநிலத்தலைவராக மு.க.ஸ்டாலின் உயர்ந்துள்ளார். படிப்படியாக முதலமைச்சராக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின். கூட்டாட்சிக்கு ஆபத்து வரும் போது முதல் நபராக நிற்பவர் மு.க.ஸ்டாலின். மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது.
ஸ்டாலினின் 23 ஆண்டு கால வாழ்க்கையை புத்தகத்தில் எழுதியுள்ளார். பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க ஸ்டாலின் போராடி வருகிறார். மிசா கால கட்டத்தில் நானும் ஸ்டாலினும் பாதிக்கப்பட்டோம். ஸ்டாலின் படிப்படியாக வளர்ந்து, இந்த உயரத்தை அடைந்துள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையை காப்பதிலும் திராவிட இயக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. கேரளாவுடனான நல்லுறவு தொடர்வதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்து வருகிறார் இவ்வாறு கூறினார்.
மேலும் செய்திகள்
உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரவுடிகள் செல்போனை பறித்ததால் 4 கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி: பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு
தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!