ஸ்மார்ட்சிட்டி ஊழல் குறித்து விசாரிக்க விரைவில் குழு!: கொசு ஒழிப்பு பணிகளை தொடங்கி வைத்து அமைச்சர் கே.என்.நேரு பேட்டி..!!
2022-02-28@ 14:25:53

சென்னை: ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விசாரணை நடத்த விரைவில் குழு அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச்சாலை பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் டிரோன்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விசாரணை நடத்த விரைவில் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
புதிதாக மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். முன்னதாக சென்னை பசுமைவழிச்சாலை பகுதியில் உள்ள நீர்வழி தடங்களில் டிரோன்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார். சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் 3,463 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
கைத்தெளிப்பான்கள் மற்றும் 371 பேட்டரிகள் மூலம் இயங்கக்கூடிய கருவிகள் மூலமாகவும், கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில் நிதிச்சுமை காரணமாக காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் முதலமைச்சரின் அனுமதி பெற்று காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக புதிதாக 10 இடங்களில் தானியங்கி மழை அளவீடு: இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டம்
சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.700 கிலோ கிராம் நகைகள் மீட்பு: காவல்துறை தகவல்...
சென்னை மாநகராட்சியில் வார்டு அளவிலான நீர் மேலாண்மையை ஆய்வு செய்ய திட்டம்: இதுவரை 10,000 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு
சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் 2 நாட்கள் பிரமாண்ட கலை நிகழ்ச்சி...
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...