இலங்கைக்கு எதிராக இன்று முதல் டி.20போட்டி; பாபர் அசாம் சாதனையை சமன் செய்வாரா ரோகித்சர்மா?
2022-02-24@ 16:52:04

லக்னோ: இந்தியா-இலங் கை அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைக்க காத்திருக்கிறது. இன்று இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ச்சியாக டி.20யில் 10வது வெற்றியாக அமையும். டி.20யில் அதிக ரன் எடுத்தவர்களில் ரோகித்சர்மா 122 போட்டியில் 3263 ரன்னுடன் 3வது இடத்தில் உள்ளார். இன்று இவர் 37 ரன் எடுத்தால் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார்.
நியூசிலாந்தின் குப்டில் 3299, கோஹ்லி 3296 ரன்னுடன் முதல் 2 இடங்களில் உள்ளனர். மேலும் ரோகித்சர்மா இன்று 63 ரன் எடுத்தால் குறைந்த இன்னிங்சில் டி.20 போட்டியில் 1000 ரன் அடித்த கேப்டன் என்ற சாதனையை பாகிஸ்தானின் பாபர் அசாமுடன் பகிர்ந்து கொள்வார். கேப்டனாக பாபர் அசாம் 26, கோஹ்லி 30, டூபிளசிஸ் 31, பிஞ்ச் 32 இன்னிங்சில் ஆயிரம் ரன்னை கடந்தனர். ரோகித்சர்மா கேப்டனாக 25 டி.20 போட்டியில் 937 ரன் எடுத்துள்ளார். இதில் 21 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
மேலும் செய்திகள்
சில்லி பாய்ன்ட்...
ஃபிபா அதிரடி நடவடிக்கை இந்திய கால்பந்து கூட்டமைப்பு சஸ்பெண்ட்
சின்சினாட்டி ஒபன் டென்னிஸ்: 2வது சுற்றில் அலிசன்; லெய்லா வெளியேற்றம்
22வது காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.4.31 கோடி ஊக்கதொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து: 3ம் தரப்பு தலையீடு இருப்பதாக ஃபிபா நடவடிக்கை...
நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் சிமோனா, புஸ்டா சாம்பியன்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!