உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாடியால் ஆட்சியை பிடிக்க முடியாது: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி சர்ச்சை பேட்டி
2022-02-23@ 10:45:01

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் இன்று நடைபெற்று வரும் 4 ஆம் கட்ட தேர்தலில் காலையிலேயே வாக்களித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, செய்தியாளர்களை சந்தித்து சமாஜ்வாடி கட்சிக்கு எதிராக பேட்டி அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் போட்டியிட்டாலும், அதன் தலைவர் மாயாவதி எந்த தொகுதியிலும் போட்டி இடவில்லை. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் இன்று நடைபெற்று வரும் 4ஆம் கட்ட தேர்தலில் லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் மாயாவதி காலையிலேயே வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமாஜ்வாடி கட்சிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். சமாஜ்வாடி கட்சி மீது இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், சமாஜ்வாடிக்கு அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். சமாஜ்வாடி கட்சியினர் என்றாலே குண்டர்கள் என்றும், மாஃபியாக்கள் என்றும் தெரிவித்த அவர், சமாஜ்வாடி ஆட்சியில் மாநிலத்தில் வன்முறைகள் அதிகம் நடைபெற்றதாக தெரிவித்தார். உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாடியால் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் மாயாவதி குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள்
விவசாயிக்கு இலவச மின்சாரம் ரத்தானால் ஆழாக்கு கூட மிஞ்சாது: கடும் உணவு தட்டுப்பாடுக்கு வழிவகுக்கும் ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா
சுகாதார திட்டங்களுக்கான ஒன்றிய அரசு தரும் நிதியை விரைவாக பெற வேண்டும்: மாநிலங்களுக்கு அறிவுரை
தெலங்கானாவில் வாகனம், ரயில்கள் நிறுத்தம் இருந்த இடத்தில் 1 நிமிடம் தேசிய கீதம் பாடிய மக்கள்: சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு
கூட்டு பலாத்காரம், 7 பேர் படுகொலை பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுதலை: பொதுமன்னிப்பு என்ற பெயரில் குஜராத் அரசு சர்ச்சை உத்தரவு
ஆந்திராவில் உள்ள 10 தங்க சுரங்கங்களை மீண்டும் திறக்க ஏலம்
இலவசம்னு சொல்றதை நிறுத்துங்கள்: கெஜ்ரிவால் ஆவேசம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!