தோற்றத்தை கிண்டலடித்த விவகாரம் நெட்டிசன்களை முட்டாள்கள் என விமர்சித்த காஜல் அகர்வால்
2022-02-10@ 00:37:28

சென்னை: நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் தனது போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அவரது தோற்றத்தை பார்த்து சிலர் கிண்டலடித்தனர். இதுபற்றி காஜல் கூறியது:
சில பாடி ஷேமிங் கிண்டல்கள் மற்றும் மீம்ஸ்கள் என்னை எதுவும் செய்யமுடியாது. அன்பாக இருக்க கற்றுக்கொள்வோம், அது மிகவும் கடினமாக இருந்தால், வாழ்வோம் வாழவிடுவோம். இதுபோன்ற சூழ்நிலைகளை சந்திப்பவர்களுக்கு என்னுடைய யோசனைகள் எதையும் புரிந்து கொள்ளாமல் தங்களை பற்றி மட்டுமே யோசிக்கும் சில முட்டாள்களும் கண்டிப்பாக இதை படிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் நம் உடல், எடை அதிகரிப்பு, முகத்தில் சோர்வு என மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். ஹார்மோன் மாற்றங்களால் குழந்தை வளரும்போது நம் வயிறு மற்றும் மார்பகங்கள் பெரிதாகி, நம் உடல் பாலூட்டுவதற்கு தயாராகிறது. சிலருக்கு உடல் பெரிதாகும் இடத்தில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் உருவாகலாம். சில சமயங்களில் நமது முகங்களில் பருக்கள் தோன்றலாம். நாம் வழக்கத்தைவிட மிகவும் சோர்வாகவும் நேரிடும். மேலும், பிரசவத்திற்குப் பிறகு, நாம் முன்பு இருந்த அழகை திரும்பப்பெற சிறிது காலம் ஆகலாம் அல்லது கர்ப்பத்திற்கு முன்பு நாம் இருந்த உருவத்தை நம்மால் திரும்பப் பெற முடியாமலேயே போகலாம். இது எல்லாம் தெரியாத முட்டாள்கள் இருக்கிறார்கள். அவர்களை திருத்த முடியாது. இவ்வாறு காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
Tags:
Kajal Agarwal mocking appearance affair Netizen idiots critic தோற்றத்தை கிண்டலடித்த விவகாரம் நெட்டிசன் முட்டாள்கள் விமர்சித்த காஜல் அகர்வால்மேலும் செய்திகள்
சென்னையில் தனியார் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு
பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி காலமானார்
ஓங்கூர் பாலம் சீரமைப்பு பணி, தொடர் விடுமுறை சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உட்பட 5 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்
தாம்பரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு
தமிழகத்தில் நடந்த லோக் அதாலத்தில் 78 ஆயிரம் வழக்குகளில் தீர்வு: ரூ.440 கோடி பைசல்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!