மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, குஷ்பு எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் புகார்
2022-01-29@ 01:23:12

சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு மற்றும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் காங்கிரஸ் தகவல் அறியும் சட்டத்துறை தலைவர் கனகராஜ் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
தஞ்சை மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மதமாற்றம் காரணமாக மாணவி உயிரிழந்ததாக பாஜ தலைவர் அண்ணாலை, நடிகை குஷ்பு சுந்தர், எச்.ராஜா ஆகியோர் தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி தற்கொலை வழக்கில் விசாரணை நடந்து வரும் நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ள நிலையில் இவர்கள் வழக்கை திசை திருப்பும் முயற்சியில் பொய்யான செய்திகளை பரப்பில் வருகின்றனர்.
மேலும், பொதுமக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் இவர்களது போராட்டம் அமைந்துள்ளது. பூக்கடை போல் இருக்கக்கூடிய தமிழகத்தை சாக்கடை போல மாற்றும் நோக்கிலும், அமைதியை சீர்குலைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டு வரும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு, எச்.ராஜா ஆகியோர் மீது ஐபிசி 153(ஏ),295(ஏ),505, 298, 509, 341, 332 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பாஜக தலைமையகத்தை முற்றுகையிடுவோம்: சிவசேனா எச்சரிக்கை
வருகிற 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச் செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்வு செய்ய தீர்மானம்; எடப்பாடி முயற்சியை, சட்டப்பூர்வமாக முறியடிக்க பன்னீர்செல்வம் திட்டம்
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ பன்னீர் செல்வம் மனு... நேற்று மாலை தான் தனக்கு அழைப்பிதழ் வந்ததாக சாடல்!!
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகிறார் எடப்பாடி பழனிசாமி : ஜெயலலிதாவுக்கு நிகராக பழனிசாமிக்கு அதிகாரம் வழங்க திட்டம்!!
பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைதான் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க காரணம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு
பொதுக்குழு கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆதரவாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!