13 கவுன்சிலர்களில் 11 பேர் ஆதரவு; குஜிலியம்பாறை யூனியன் அதிமுக தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: திமுகவை சேர்ந்தவர் தலைவராக வாய்ப்பு
2022-01-29@ 01:12:01

குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 13 வார்டுகள் உள்ளன. இதில், அதிமுக - 6, திமுக - 3, தேமுதிக - 1, மதிமுக - 1, சுயேச்சை - 2 என 13 கவுன்சிலர்கள் உள்ளனர். ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த உமாமகேஸ்வரி இருந்தார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரபட்டது. இதையடுத்து குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அதிமுக யூனியன் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றும் கூட்டம் பழநி ஆர்டிஓ சிவக்குமார் தலைமையில் நேற்று காலை 11 மணி அளவில் நடந்தது. இதில், 11 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் அனைவரும் தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டனர். இதையடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக பழநி ஆர்டிஓ சிவக்குமார் தெரிவித்தார். திமுகவைச் சேர்ந்த ஒருவர் யூனியன் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேடசந்தூர் டிஎஸ்பி மகேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
காஞ்சிபுரம் 36வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு: நாமக்கல்லில் 3ம் தேதி நடக்கிறது
அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டு சென்று விட்டு ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லாது
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார்
ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுக்கள் பரிசீலனை; பாஜக கூட்டணி வேட்பாளர், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மனு ஏற்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்