28 நாள் ரீசார்ஜ் திட்டத்தை 30 நாளாக மாற்ற வேண்டும்: செல்போன் நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு
2022-01-29@ 00:16:42

புதுடெல்லி: தொலைதொடர்பு நிறுவனங்கள் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் செல்லுபடியாகக் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும் என டிராய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரீசார்ஜ் திட்டங்கள் தற்போது 28 நாட்கள் செல்லுபடியாகக் கூடிய அளவிலேயே உள்ளன. இதன் காரணமாக மாதாந்திர அடிப்படையில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ஓராண்டிற்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டி உள்ளது.
எனவே, வாடிக்கையாளர்கள் நலன் கருதி அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் 30 நாட்கள் செல்லுபடியாகக் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டுமென இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, டிராய் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமும் குறைந்தபட்சம் ஒரு பிளான் வவுச்சர், ஒரு சிறப்பு கட்டண வவுச்சர் மற்றும் ஒரு காம்போ வவுச்சரையாவது முப்பது நாட்கள் செல்லுபடியாகக் கூடிய வகையில் கொண்டிருக்க வேண்டும்’ என்று கூறி உள்ளது. இந்த உத்தரவுக்கு 60 நாட்களில் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் இணங்க வேண்டும்.
மேலும் செய்திகள்
ஜனாதிபதி தேர்தல்... இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவுக்கு டிஆர்எஸ் கட்சி ஆதரவு!!
அதிகாரிகளின் பாஸ்வேர்டை திருடி வருமான வரித்துறையில் ரூ.1.39 கோடி கையாடல்
அசாமில் இப்படியும் ஒரு ஆபத்து காண்டாமிருகங்களுக்கு எமனாகும் களைகள்: உணவை நஞ்சாக்கி உயிரை பறிக்கும்
ஆன்லைனில் இன்று டிக்கெட் வெளியீடு திருப்பதி ஆர்ஜித சேவைக்கு குலுக்கலில் பக்தர்கள் தேர்வு
செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் எப்ஐஆரில் உள்ள தகவலை சரிபார்ப்பது கட்டாயமில்லை: நாக்பூர் நீதிமன்றம் அதிரடி
பாக்.கும், சீனாவும் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தும்: விமானப்படை தளபதி எச்சரிக்கை
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!