பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம்.! அண்ணா பல்கலை அறிவிப்பு.!
2022-01-28@ 17:13:53

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. coe1.annauniv.edu என்ற இணையத்தில் இதுவரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, மற்ற அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டியிருந்தது.
இதன்பின், கல்லூரிகள் பிப்ரவரி 1-ல் திறந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் தான் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. செய்முறை தேர்வுகளுக்காக மாணவர்கள் நலன் கருதி பிப்ரவரி 1-ல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ஆன்லைன் தேர்வு நடக்காத நாட்களில் மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. coe1.annauniv.edu.in என்ற இணையதளத்தில் இதுவரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், பிப்ரவரி 19-ல் நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை மார்ச் மாதத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் சக்கரபாணி பேச்சு
நிலுவை வழக்குகளை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் வலியுறுத்தல்
வருகிற 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச்செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்வு செய்ய தீர்மானம்: இபிஎஸ் முயற்சியை முறியடிக்க ஓபிஎஸ் திட்டம்
பாதுகாப்பு பண வைப்புத்தொகை செலுத்துவதில் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு விலக்கு: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக கோயில்களில் அன்னை தமிழில் வழிபட 1,500 பேர் பதிவு: அறநிலையத்துறை தகவல்
சுற்றுலா வேன்களில் இருக்கை அதிகரிப்பு குறித்த அறிக்கை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!