குன்னூர் மலை ரயில் பாதையில் குட்டியுடன் உலா வரும் காட்டு யானை
2022-01-28@ 13:59:44

குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயில் பாதையில் பிறந்து ஒரு மாத குட்டியுடன் காட்டு யானை முகாமிட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதை ஹில்குரோ, ரன்னிமேடு ரயில் நிலையம் இடையே பிறந்து ஒரு மாதம் ஆன குட்டியுடன் யானை கடந்த ஒரு மாத காலமாக முகாமிட்டுள்ளது.
அவ்வப்போது மலை ரயில் பாதையில் உலா வருவதும் மலை ரயில் என்ஜினுக்கு ஊற்றக்கூடிய நீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி வருகிறது.குட்டியுடன் உள்ளதால் வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அதே பகுதியில் முகாமிட்டுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் அதே பகுதியில் உலா வருவதால் அங்கு பணிபுரியும் ஊழியா்கள் அச்சம் அடைந்துள்ளனர். மலைப்பாதையில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விபத்து அபாயம் கருதி பாதுகாப்பாக வனபகுதிகளுக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
ரயான் துணி உற்பத்தி ஒருவாரம் நிறுத்தம்
தக்கலை அருகே வேளிமலையில் மலையேறி சென்ற 4 இளைஞர்கள் திரும்ப முடியாமல் காட்டில் தவிப்பு: தீயணைப்பு துறை, பொதுமக்கள் மீட்டனர்
நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானைக்கு கேரள காலணி அணிவிப்பு
கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
வழக்கு விவரங்களை இ-கோர்ட் வெப்சைட்டில் உடனே பதிவேற்ற வேண்டும்: கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு
நாமக்கல் அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் ஆய்வு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்