முன்களப்பணியாளர் ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் ஒதுக்க வலியுறுத்தி ஆம்புலன்ஸ் டிரைவர் மகன் வழக்கு: விளக்கமளிக்க உத்தரவு
2022-01-28@ 01:44:21

மதுரை: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த அரவிந்த், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினேன். இதில், 500க்கு 441 மதிப்பெண் பெற்றேன். இதனால் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு எழுதினேன். இதில், 720க்கு 463 மதிப்பெண் பெற்றேன். என் தந்தை பாலசுப்ரமணியன், கடந்த 2002 முதல் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றுகிறார். முன்களப் பணியாளரான என் தந்தையின் பணி கொரோனா பேரிடர் காலத்தில் அதிகமாக இருந்தது. முதல் தலைமுறை பட்டதாரியான எனக்கு முன்களப்பணியாளர் குழந்தைகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் சீட் ஒதுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மனுவிற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 1க்கு தள்ளி வைத்தார்.
மேலும் செய்திகள்
ரயான் துணி உற்பத்தி ஒருவாரம் நிறுத்தம்
தக்கலை அருகே வேளிமலையில் மலையேறி சென்ற 4 இளைஞர்கள் திரும்ப முடியாமல் காட்டில் தவிப்பு: தீயணைப்பு துறை, பொதுமக்கள் மீட்டனர்
நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானைக்கு கேரள காலணி அணிவிப்பு
கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
வழக்கு விவரங்களை இ-கோர்ட் வெப்சைட்டில் உடனே பதிவேற்ற வேண்டும்: கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு
நாமக்கல் அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் ஆய்வு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்