வடசென்னை பகுதிகளில் கஞ்சா விற்ற தம்பதி கைது: டோர் டெலிவரி செய்தது அம்பலம்
2022-01-28@ 00:38:33

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் நேற்று முன்தினம் மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி, சந்தேகத்தின் பேரில், அவர்களது பைக்கை சோதனை செய்தபோது அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள், வியாசர்பாடி தாமோதரன் நகரை சேர்ந்த தினகர ராஜா (27), அவரது மனைவி பிரியா (26) என்பது தெரியவந்தது.
இவர்கள், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து பதுக்கி வைத்து, வியாசர்பாடி, காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா கேட்கும் நபர்களுக்கு, டோர் டெலிவரி செய்து வந்தது தெரிந்தது. இவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
புல்லட் வாங்க மனைவியின் 17 சவரனை திருடிய புதுமாப்பிள்ளை: கொள்ளை போனதாக நாடகமாடியது அம்பலம்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது: 600 மாத்திரைகள் 100 ஊசி பறிமுதல்
திருப்பத்தூர் அருகே பரபரப்பு; அதிகாலை எழுந்து சாணி தெளிக்க சொன்ன மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்: ஆண் நண்பருடன் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
கோயில் உண்டியல் உடைப்பு
ஆட்டோவில் வந்து கைவரிசை; மாஸ்க் அணிந்து திருட்டு அண்ணன், தம்பி கைது
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்