திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் எஸ்கேப்
2022-01-28@ 00:16:28

மதுராந்தகம்: படாளம் காவல் நிலையத்துக்கு திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர், திடீரென காவல் நிலையத்தில் இருந்து தப்பிவிட்டார். இதனால் போலீசாருக்கு பெரும் திணறல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு சம்பவம் நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார், காஞ்சிபுரத்தை சேர்ந்த வீரா (41) என்பவரை சந்தேகத்தின்பேரில் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு அவரை, 2 நாட்களாக வைத்து விசாரித்தனர். மேலும், விசாரணை செய்வதற்காக அவரை, காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை போலீசார் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போது யாரும் எதிர்பாராத நேரத்தில் வீரா, காவல் நிலையத்தில் இருந்து நைசாக வெளியேறி தப்பிவிட்டார். அவரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காவல் நிலையத்தில் இருந்த விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் தப்பி ஓடிய சம்பவத்தால் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
காளி ஆவணப்பட இயக்குனருக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல்: கோவையில் இந்து இயக்க தலைவி கைது
குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் கழுத்தை நெரித்து கணவன் கொலை: நாடகமாடிய மனைவி கைது
பைக்கில் லிப்ட் தராததால் ஆத்திரம் வாலிபருக்கு அடி உதை
கார், பைக் டயர்களை பஞ்சராக்குவதுடன் தெருவில் மணல், ஜல்லி கொட்டிவைத்து மக்களிடம் அடாவடி காட்டும் ஆசாமி
மூதாட்டியின் நகையை பறித்து கொலை செய்த வழக்கு வாலிபருக்கு ஆயுள் தண்டனை: திருவள்ளூர் 1-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திருவலம் அருகே கல்லூரிக்கு சென்றபோது நடுரோட்டில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து: பைக்கில் தப்ப முயன்ற மாணவன் கைது
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!