மாமல்லபுரத்தில் பேருந்தில் மீன்கூடையுடன் ஏற பெண்ணுக்கு அனுமதி மறுப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
2022-01-27@ 17:07:57

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கிராமத்தை சேர்ந்த கடும்பாடி என்பவரின் மனைவி செல்லம்மாள் (55), மீன், இறால், நண்டுகளை கூடையில் வைத்து தாம்பரம், மணிமங்கலம், படப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகளில் சென்று, தெருத் தெருவாக சுற்றி விற்பனை செய்வது வழக்கம்.
நேற்று காலை வழக்கம் போல் மீன்கூடையுடன் விற்பனைக்காக மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சென்னை செல்லும் அரசு பேருந்தில் செல்லம்மாள் ஏறினார். அப்போது நடத்துநர், அந்த பெண்ணை தகாத வார்த்தைகளில் திட்டி, பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டார். அதற்கு செல்லம்மாள், பணம் கொடுத்து தானே பயணம் செய்கிறோம். மீன்கூடையுடன் ஏறக்கூடாது என்றால் எப்படி என கேள்வி எழுப்பினார்.
அதற்கு நடத்துநர், என் பேருந்தில் உன்னை ஏற்றமாட்டேன். இதுபற்றி யார்கிட்ட வேணாலும் புகார் அளித்து கொள் என அடாவடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் குறித்த நேரத்தில் மீன்களை கொடுக்கவில்லை என்றால் அழுகி வீணாகிவிடுமே என்ற கவலையில் செல்லம்மாள் கதறி அழுது நடத்துநரிடம் கெஞ்சி கேட்டும், அவரை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்துவிட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அரசு பேருந்தில் மீன்கூடையுடன் செல்ல பெண்ணுக்கு அனுமதி மறுத்து, தகாத வார்த்தைகளில் பேசிய நடத்துநர் மீது துறை ரீதியாக சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொக்கிலமேடு மீனவ கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகள்
எடப்பாடி, வேலுமணி ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்களில் திடீர் ரெய்டு: கோவை, அருப்புக்கோட்டையில் வருமானவரித்துறை அதிரடி
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் கோலாகலம்: 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
கடந்த அதிமுக ஆட்சியில் 2015ல் கட்டப்பட்டது அரசுப்பள்ளி மேற்கூரை விழுந்து 3 மாணவர்கள், ஆசிரியர் காயம்: தண்டராம்பட்டு அருகே பரபரப்பு
பெற்றோருக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை: ஓசூர் போலீசார் விசாரணை
கோவையில் ருசிகரம் துவக்கப்பள்ளியில் மாணவர் தேர்தல்
ஆர்டிஐயின் கீழ் ஆதீனங்கள் வராது: ஐகோர்ட் கிளை உத்தரவு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!