கைமாறும் ஏர் இந்தியா!: பிரதமர் நரேந்திர மோடியுடன் டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் சந்தித்து ஆலோசனை..!!
2022-01-27@ 15:42:00

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சற்று நேரத்தில் முறைப்படி ஏர் இந்தியா நிறுவனத்தின் பொறுப்பு டாடாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பானது நிகழ்கிறது. நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலத்தில் ஒன்றிய அரசு விற்றபோது 18 ஆயிரம் கோடி ரூபாய் விலைக்கு டாடா குழுமம் அதனை வாங்கியது. இதில் 2700 கோடி ரூபாய் அரசுக்குப் பணமாகவும், மீதமுள்ள தொகை ஏர் இந்தியா தனது கடனை தீர்க்க பயன்படுத்த உள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ஒன்றிய அரசின் நிறுவனமாக செயல்பட்டு வந்த நிலையில், அது தற்போது 69 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா குழுமத்திடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்படவிருக்கிறது.
இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வந்தது. இத்தகைய சூழலில் இன்று டாடா குழுமத்தில் இயக்குனர்களாக உள்ள ஒன்றிய அரசு பிரதிநிதிகள் ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர்களுக்கு பதிலாக டாடா குழுமத்தின் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார். அடுத்தபடியாக டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை தனது பொறுப்பில் ஏற்று அதற்கு புதிய தலைமை அதிகாரி மற்றும் முக்கிய அதிகாரிகளை நியமிக்க இருக்கிறது. டாடா குழுமம் ஏர் இந்தியா மூலம் இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
பிரதமர் யார் நலனின் அக்கறை காட்டுகிறார்?.. ஜிஎஸ்டி வரி குறித்து ராகுல் காந்தி கண்டனம்..!
தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் உடன் தங்கியவருக்கு ஜாமின்: மும்பை ஐகோர்ட் உத்தரவு
பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு; காரில் ஆட்டம் போட்ட குற்றவாளிகள் கைது: டெல்லி போலீஸ் அதிரடி
பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு ஹேமந்த் சோரனின் ஆதரவு கிடைக்குமா?.. பழங்குடியினர் கட்சி என்பதால் எதிர்பார்ப்பு
பெண் தெய்வம் குறித்த சர்ச்சை: லீனா மீது உ.பி போலீஸ் வழக்கு
அரசியல் நமக்கு ஒத்துவராது: பாலிவுட் நடிகர் கருத்து
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!