திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சமத்துவ பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி!: சீறிப்பாயும் காளைகளை தீரத்துடன் அடக்கும் காளையர்கள்..!!
2022-01-27@ 15:16:58

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சமத்துவ பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமயபுரம் அடுத்துள்ள நடுஇருங்களூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 450 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ளனர். விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் கலந்துக் கொண்டார். வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள வளையக்காரனூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 600 காளைகளும், 350 காளையர்களும் பங்கேற்றுள்ளனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கு பீரோ, கட்டில், சைக்கிள், தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி 500க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
நடிகை பலாத்கார காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை தடயவியல்; பரிசோதனைக்கு அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
நெல்லை - மேட்டுப்பாளையம், தாம்பரம் உள்ளிட்ட 4 சிறப்பு ரயில்களை நீடிப்பு செய்ய தெற்கு ரயில்வே முடிவு: ரயில்வே வாரியத்தின் அனுமதிக்காக காத்திருப்பு
நாலுமாவடியில் நாளை மறுநாள் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை திறப்பு விழா
குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் குட்டிகளுக்கு நடைபயிற்சி அளிக்கும்; 10 யானைகள்
குழந்தை பாக்கியம் தரும் மருத்துவ குணம் வாய்ந்தது; குன்னூர் பர்லியார் பண்ணையில் துரியன் பழம் சீசன் துவங்கியது
இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால், தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவு அமைச்சருக்கு ரங்கசாமி கடிதம்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!