தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு!: மீனவர்களுக்கு நாளை மட்டும் எச்சரிக்கை..வானிலை மையம் தகவல்..!!
2022-01-27@ 14:17:22

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களுக்கு மேலே நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரியில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 28ல் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு, இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
ஜனவரி 29 மற்றும் 30ல் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து ஜனவரி 31ல் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டம் சிவகிரியில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பெரியகுளம் 3 செ.மீ., ஆயிக்குடி, கயத்தாறு, சோத்துப்பாறை, கோடநாடு, ஏற்காட்டில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
நாளை மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு நாளை மட்டும் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
கட்டிட கான்ட்ராக்டரை தாக்கிய வழக்கு: நடிகர் சந்தானம் நீதிமன்றத்தில் ஆஜர்
துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
ஓய்வு பெறும் நாளில் மருத்துவக்கல்லூரி முதல்வர் வேளாண் அதிகாரி சஸ்பெண்ட்
ஆசிரியர்களுக்கு 17ம் தேதி முதல் மாறுதல் கவுன்சலிங்
உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உயரதிகாரிகள் வீடுகளில் பணியாற்றிய 210 ஆர்டர்லிகள் திரும்ப பெறப்பட்டனர்: தமிழக காவல் துறை தகவல்
தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கம்: தமிழக அரசு உத்தரவு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்