மெயினருவி, ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்த மக்கள்
2022-01-27@ 13:57:43

தென்காசி: குற்றாலத்தில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு காணப்பட்டது. குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் மட்டும் பாறையை ஓட்டினார் போன்று சிறிதளவு தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் பெண்கள் பகுதியில் ஒரு பிரிவிலும், ஆண்கள் பகுதியில் ஒரு பிரிவிலும் சுமாராக தண்ணீர் விழுகிறது.
பழைய குற்றால அருவியில் சுமாராக தண்ணீர் விழுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை சபரிமலை ஐயப்ப சீசன் காரணமாக பக்தர்களின் வருகை அதிகமாக இந்த நிலையில் நடை அடைக்கப்பட்டதால் பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்தது. குறைவான தண்ணீர் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து காணப்பட்ட நிலையில் குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு நேற்று குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்பட்டது.
மேலும் செய்திகள்
வேறொரு பெண்ணுடன் தொடர்பு என மனைவி புகார் போலீஸ் விசாரணையின்போது விஷம் குடித்து கணவன் தற்கொலை: அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்
தற்காலிக ஆசிரியர்கள் நியமன தடையை நீக்க கோரி முறையீடு: 8ம் தேதி விசாரணை
இலங்கை தமிழர்கள் 8 பேர் தனுஷ்கோடி வருகை
நெல்லையில் முதல் குறைதீர் கூட்டம் ஊர்காவல் படையில் திருநங்கைகளுக்கு வேலை: கலெக்டர் தகவல்
பைக் புதையும்படி சாலை உதவி பொறியாளர் சஸ்பெண்ட்
தமிழகம் முழுவதும் 2.50 கோடி மரக்கன்றுகள் நடப்படும்: வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!