மணப்பாறையில் ஜிஹெச் செடிக்குள் பச்சிளம் பெண் குழந்தை வீச்சு
2022-01-27@ 12:45:59

துவரங்குறிச்சி: மணப்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள செடிக்குள் பச்சிளம் பெண் குழந்தையை வீசிய கல்நெஞ்ச தாயை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி மாவட்டம் மணப்பாறை தலைமை அரசு வளாக ஆய்வக கட்டிடத்தின் பின்புற பகுதியிலிருக்கும் செடிகளுக்கிடையே இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. மருத்துவமனை பணியிலிருந்த தூய்மைப் பணியாளர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது அங்கு பிறந்து 20 நாட்களே ஆன பெண் குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
குழந்தையை மீட்டெடுத்த பணியாளர்கள் அவசரப் பிரிவுக்கு கொண்டு சென்று பணி மருத்துவக்குழுவினரிடம் ஒப்படைத்தனர். குழந்தைக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர். குழந்தை ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதியுற்ற நிலையில் தீவிர சிகிச்சை சிசு பிரிவிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.புதன்கிழமைகளில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது வழக்கம். அப்படி சிகிச்சைக்கு வந்த நபர் குழந்தையை விட்டு சென்றிருக்கலாம் என மணப்பாறை போலீசார் முதற்கட்ட விசாரணையினை நடத்தி கல்நெஞ்ச தாயை தேடி வருகின்றனர்.மேலும் இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு அரசு பள்ளி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மின் தகன மேடை அமைக்க நிதியுதவி
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா: ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
திருக்கழுக்குன்றத்தில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மறைவு
மதுராந்தகத்தில் ஏரி காத்த கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் துவங்கியது
செங்கல்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!