கபிஸ்தலம் பகுதியில் சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
2022-01-26@ 15:00:06

கும்பகோணம்,ஜன.26: கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதி சாலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம் அருகே பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் கிராமத்தில் பெருமாள் கோவில் தெருவில் உள்ள மின் கம்பம் சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது .இந்த மின் கம்பம் இங்கு அமைக்கப்பட்டு இருப்பதால் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் மற்றும் லாரி போன்ற வாகனங்கள் வந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
விவசாய பணிகளுக்கு உரம் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச்செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே சாலையின் நடுவில் அமைந்துள்ள இந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி சாலையின் ஓரத்தில் மாற்றியமைத்து தந்தால் இந்த பகுதியில் கனரக வாகனங்கள் மற்றும் விவசாய பணிகளுக்கு செல்லும் வாகனங்களில் இலகுவாக செல்ல ஏதுவாக இருக்கும். எனவே போர்க்கால அடிப்படையில் இந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி சாலை ஓரம் அமைத்து தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகள்
பைப்லைன் இல்லாததால் மழைநீர் கசிவு அருவிபோல் காட்சியளிக்கும் மெட்ரோ ரயில் மேம்பாலம்: பொதுமக்கள் தவிப்பு
நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுக்கு முற்பட்ட செப்பேடு கண்டெடுப்பு
திருச்சி பொதுப்பணித்துறை ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.31.26 லட்சம் பறிமுதல்
கோவை- மஞ்சூர் சாலையில் அரசு பஸ், தனியார் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை கூட்டம்: பயணிகள் பீதி
திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் சேலம் டூரிஸ்ட் நிறுவனத்தில் ஆந்திர போலீசார் விசாரணை
புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழிலை மேம்படுத்த 11 பேர் குழு: ஒன்றிய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகம் நியமனம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!