திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் பூசணிக்காயில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
2022-01-26@ 13:03:07

திருமயம்: திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பூசணிக்காயில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான கோட்டை பைரவர் கோயில் உள்ளது. இதுமதுரை, காரைக்குடி செல்லும் முக்கிய சாலையில் உள்ளதால் சாதாரன நாட்களில் இங்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வழிபாடு நடத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோட்டை பைரவர் கோயிலில் பூசணிக்காய், மிளகு முடிச்சு தீப வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக 27 பூசணிக்காயை இரண்டாக வெட்டி அதில் எண்ணெய், நெய் ஊற்றி விளக்கேற்றினர். இதனை தொடர்ந்து சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்றது. இதனிடையே கோயிலுக்கு வந்த பக்தர்களும் பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.
மேலும் செய்திகள்
தமிழக-கர்நாடக எல்லையில் காரை துரத்திய காட்டு யானை: உயிர் தப்பிய பயணிகள்
முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: இருதரப்பையும் சேர்ந்த 400 பேர் மீது வழக்குப்பதிவு
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம், ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கடியபட்டணத்தில் கடல் சீற்றம் அலை தடுப்பு சுவரில் தூக்கி வீசப்பட்ட பைபர் வள்ளம்: ஒரு வள்ளம் கடலில் மூழ்கியது
சேலம் ஜங்ஷன் அருகே குறுகலான ரயில்வே தரைப்பாலம் 10 மணி நேரத்தில் மாற்றியமைப்பு: இன்னும் பாதியளவு பாலத்தை சீரமைக்க ஏற்பாடு
தர்மபுரியில் அரசு பஸ் மரத்தில் மோதி விபத்து: 24 பேர் படுகாயம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!