கொள்ளிடம் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சாலை வசதி: பொதுமக்கள் மகிழ்ச்சி
2022-01-26@ 08:45:18

கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் பத்தாண்டுகளுக்குப் பிறகு சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள தைக்கால் ஜின்னா தெருவிற்கான சாலை மிகவும் மோசமாகவும், குண்டும் குழியுமாகவும் இருந்துவந்தது. இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் கொள்ளிடம் அருகே உள்ள அனுமந்தபுரம் அம்பேத்கர்தெரு சாலை கடந்த பத்தாண்டுகளாக மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து இரண்டு கிராம மக்களின் கோரிக்கையினை ஏற்று கொள்ளிடம் ஒன்றியகுழு தலைவர் ஜெயபரகாஷ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததன் பேரில் இருபத்தி நான்காவது மானியக்குழு நிதியிலிருந்து சாலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு சாலை மேம்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. மேலும் 2 தெருக்களில் உள்ள சாலைகளும் தரமாக அமைக்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாலை வசதியை மேம்படுத்தி கொடுத்த அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
ரயான் துணி உற்பத்தி ஒருவாரம் நிறுத்தம்
தக்கலை அருகே வேளிமலையில் மலையேறி சென்ற 4 இளைஞர்கள் திரும்ப முடியாமல் காட்டில் தவிப்பு: தீயணைப்பு துறை, பொதுமக்கள் மீட்டனர்
நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானைக்கு கேரள காலணி அணிவிப்பு
கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
வழக்கு விவரங்களை இ-கோர்ட் வெப்சைட்டில் உடனே பதிவேற்ற வேண்டும்: கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு
நாமக்கல் அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் ஆய்வு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்