சரக்கு விமானத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல்
2022-01-26@ 00:02:38

சென்னை: ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து பெருமளவு கடத்தல் தங்கம் சென்னைக்கு வரும் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்படுவதாக ஒன்றிய வருவாய் புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் துபாயில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமான பார்சல்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது துபாயில் இருந்து சென்னை முகவரிக்கு வந்திருந்த ஒரு பார்சல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதில் தங்க கட்டிகள் இருந்தன. அதன் எடை 12 கிலோ. சர்வதேச மதிப்பு சுமார் ₹5 கோடி. அதிகாரிகள் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். போலி முகவரி கொடுத்து சென்னைக்கு இந்த தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் மர்ம கும்பலை தீவிரமாக தேடுகின்றனர்.
மேலும் செய்திகள்
காளி ஆவணப்பட இயக்குனருக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல்: கோவையில் இந்து இயக்க தலைவி கைது
குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் கழுத்தை நெரித்து கணவன் கொலை: நாடகமாடிய மனைவி கைது
பைக்கில் லிப்ட் தராததால் ஆத்திரம் வாலிபருக்கு அடி உதை
கார், பைக் டயர்களை பஞ்சராக்குவதுடன் தெருவில் மணல், ஜல்லி கொட்டிவைத்து மக்களிடம் அடாவடி காட்டும் ஆசாமி
மூதாட்டியின் நகையை பறித்து கொலை செய்த வழக்கு வாலிபருக்கு ஆயுள் தண்டனை: திருவள்ளூர் 1-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திருவலம் அருகே கல்லூரிக்கு சென்றபோது நடுரோட்டில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து: பைக்கில் தப்ப முயன்ற மாணவன் கைது
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!