ஏலச்சீட்டு நடத்தி ரூ.7 லட்சம் மோசடி: 4 பேருக்கு வலை
2022-01-26@ 00:02:17

பெரம்பூர்: திருவொற்றியூர் சுங்கச்சாவடி பகுதியை சேர்ந்தவர் சொப்னா (எ) ஸ்டெல்லா (37). பாரிமுனை தம்பு செட்டி தெருவில் உள்ள இணையதள சேவை மையத்தில் டைப்பிஸ்ட்டாக வேலை செய்து வருகிறார். இவர், கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியில் வசிக்கும் தனக்கு அறிமுகமான கலைச்செல்வி மற்றும் அதே பகுதியை சேர்ந்த 3 பேரிடம் கடந்த 2019ம் ஆண்டு ஏலச்சீட்டுகள் போட்டுள்ளார். மாதம்தோறும் ரூ.1000, ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.7 லட்சம் வரை செலுத்தி வந்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு ஏலச்சீட்டுகளின் முதிர்வு காலம் முடிவடைந்த நிலையில், சீட்டு நடத்தி வந்த 3 பேரும் சொப்னாவுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இதுகுறித்து சொப்னா, சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்றம் வழக்கை விசாரித்து, ஏலச்சீட்டு நடத்தி ரூ.7 லட்சம் மோசடி செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கொடுங்கையூர் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் கலைச்செல்வி, கவிதா, சிவசங்கர் மணி, கலா வை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது: 600 மாத்திரைகள் 100 ஊசி பறிமுதல்
திருப்பத்தூர் அருகே பரபரப்பு; அதிகாலை எழுந்து சாணி தெளிக்க சொன்ன மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்: ஆண் நண்பருடன் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
கோயில் உண்டியல் உடைப்பு
ஆட்டோவில் வந்து கைவரிசை; மாஸ்க் அணிந்து திருட்டு அண்ணன், தம்பி கைது
கலெக்டர் அலுவலகத்தில் போலியாக நேர்காணல் நடத்தி வேலை வாங்கித் தருவதாக ரூ.1.26 கோடி மோசடி செய்த 2 பேர் கைது: பெண் உட்பட 2 பேருக்கு வலை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்