இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
2022-01-25@ 18:41:20

சென்னை: இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பு போராட்டத்தை பெரியாரும், அண்ணாவும் முன்னெடுத்தனர். கோவை, சென்னை உள்ளிட்ட ஊர்களில் கைதானவர்கள் 6 மாதம் வரை சிறை தண்டனை பெற்றனர். 1938ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த மொழிப்போராட்டத்தின் வெப்பம்தான் 2022ம் ஆண்டு வரை தணியாமல் உள்ளது; அன்றைய நாள் தந்தை பெரியார் மூட்டிய நெருப்பு ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்று சேர்த்தது. இருப்பது ஒரு உயிர், அது மொழிக்காக போகட்டுமே என்று சிறைக்கொடுமையால் முதலில் உயிர் துறந்தார் நடராஜன்; அதன் பின்பு உயிர் துறந்தார் தாளமுத்து. மாணவர்கள் போராட்டத்தை மதித்து தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று 1967ல் தீர்மானம் கொண்டு வந்தார் பேரறிஞர் அண்ணா. தமிழ், தமிழ் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை அல்ல; இந்தி உள்பட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. அதனை பிறர் மீது திணிக்கும் ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம். மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தால் தமிழ்நாடு மேன்மை அடைந்துள்ளது; தமிழுக்காக உயிர் நீத்த தியாகிகள் பலருக்கு மணிமண்டபங்கள் அமைத்தவர் கலைஞர். மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
மேலும் செய்திகள்
கொரோனாவுக்கு உலக அளவில் 6,289,402 பேர் பலி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மரத்தின் மீது மினி லாரி மோதி விபத்து
கோடம்பாக்கம் சுபேதார் கார்டன் மக்கள் ஒரு மாதத்தில் குடியிருப்பை காலி செய்து தர வேண்டும்: தா.மோ.அன்பரசன்
சென்னை திருவல்லிக்கேணியில் ஓடும் பேருந்தில் இருந்து நடத்துனரை மாணவர்கள் கீழே தள்ளிவிட்டதாக புகார்
வடகலை, தென்கலை பிரச்சனையை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது.: ஐகோர்ட்
திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ 3 லட்சம் பறிமுதல்
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி: உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்
துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.86 லட்சம் மதிப்புள்ள தங்க பசை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ 840 லிருந்து ரூ 250 ஆக குறைப்பு
ரஷ்யாவில் இருந்து வெளியேற அமெரிக்காவின் பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 பேர் ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்
தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணசீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை.: அமைச்சர் சிவசங்கர்
வேலூர் சிறையில் இருந்து வீடியோகாலில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்
தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துகளுடன் 'ஸ' வையும் இணைப்பதா?.:அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!