சென்னீர்குப்பம் ஊராட்சியில் சாலையில் தேங்கும் கழிவுநீர்
2022-01-25@ 02:25:59

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் ஊராட்சியில் ஆவடி செல்லும் சாலை, சென்னீர்குப்பம் சந்திப்பு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் பூந்தமல்லி நகராட்சியில் இருந்து வரும் கழிவுநீர் சாலையில் தேங்கி குளம்போல் தேங்கியுள்ளது.
இதனை அகற்ற வேண்டும் என பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை சென்னீர்குப்பம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிரந்தரமாக கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வப்போது மின்மோட்டார்களை வைத்து கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டாலும் தொடர்ந்து அந்த பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவி வருகிறது.
இந்நிலையில், சென்னீர்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டீஸ்வரி அன்பு மற்றும் வார்டு உறுப்பினர்கள் பூந்தமல்லி நகராட்சி கமிஷனரை அவரது அலுவலகத்திற்கு நேற்று நேரில் சந்தித்து சென்னீர்குப்பம் பகுதியில் தேங்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும் செய்திகள்
ஊராட்சி பொது நிதியில் இருந்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம்: ஊரக வளர்ச்சி இயக்குநரகம் உத்தரவு
வேறொரு பெண்ணுடன் தொடர்பு என மனைவி புகார் போலீஸ் விசாரணையின்போது விஷம் குடித்து கணவன் தற்கொலை: அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்
தற்காலிக ஆசிரியர்கள் நியமன தடையை நீக்க கோரி முறையீடு: 8ம் தேதி விசாரணை
இலங்கை தமிழர்கள் 8 பேர் தனுஷ்கோடி வருகை
நெல்லையில் முதல் குறைதீர் கூட்டம் ஊர்காவல் படையில் திருநங்கைகளுக்கு வேலை: கலெக்டர் தகவல்
பைக் புதையும்படி சாலை உதவி பொறியாளர் சஸ்பெண்ட்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!