வீடு, கடையை உடைத்து கொள்ளை
2022-01-25@ 02:17:41

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே ஊரப்பாக்கம் குமரன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (33). கடந்த சில நாட்களுக்கு முன் மணிகண்டன், சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் வைத்திருந்த 6 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
ஊரப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்தவர் முத்துசுந்தரம் (36). அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை கடையை திறக்க சென்றபோது, அங்கிருந்த விலை உயர்ந்த 11 செல்போன்களை, மர்மபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
ரூ.1.50 லட்சம் மதிப்பிலான வைரம் பதித்த பேனா திருட்டு: விஜய் வசந்த் எம்பி, போலீசில் பரபரப்பு புகார்
மருமகள், மகளுக்கு அடி உதை நடிகையின் மகளுக்கு பாலியல் தொல்லை: மாமனார் மீது போலீசில் புகார்
வேலை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பியபோது பரிதாபம் டாரஸ் லாரி மோதி மனைவி பரிதாப பலி; கணவன் கவலைக்கிடம்: லாரி டிரைவர் கைது; போலீசார் விசாரணை
ஆந்திராவுக்கு மினிவேனில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் கைது
தஞ்சை அருகே பழங்கால உலோக சிலைகள் பறிமுதல்: 2 பேர் கைது..!!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!