காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் 3 நாட்களுக்கு பின் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம்; கூட்டம் அதிகரிப்பதால் கொரோனா பரவும் அபாயம்
2022-01-25@ 02:12:39

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அரசின் கொரோனா விதிகளின்படி 3 நாட்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது. அப்போது, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதையொட்டி, வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இந்து ஆகம விதியின்படி, வழக்கம்போல் பூஜை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து 3 நாட்களுக்குப் பிறகு நேற்று கோயில்கள் திறக்கப்பட்டன. மேலும், முகூர்த்த நாள் என்பதால் காஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள் எடுக்க வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் காஞ்சிபுரம் வந்தனர். அவர்கள், வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர் கோயில், குமரகோட்டம் உள்பட பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
குறிப்பாக, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக தரிசனம் செய்தனர். இதனால், பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோர் காத்திருப்பு போராட்டம்
சாலை விபத்தில் பிரபல ரவுடி பலி
காட்டு தேவத்தூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பின் பிடியில் 150 ஏக்கர் அரசு நிலம்; மீட்டு தர கிராமமக்கள் வலியுறுத்தல்
காஞ்சிபுரம் அருகே குருபகவான் கோயில் கும்பாபிஷேகம்
ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவில் திடீர் தீ; ஊழியர்கள் தப்பினர்
ஆவடியில் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் குப்பை கொட்டும் இடமாக மாறிய மழைநீர் கால்வாய்; நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்