கோவையில் அதிமுக செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
2022-01-25@ 01:23:36

பெ.நா.பாளையம்: கோவை அருகே அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருப்பவர் கே.வி.என்.ஜெயராமன். இவர், இரண்டு முறை வீரபாண்டி பேரூராட்சியின் தலைவராக இருந்துள்ளார். இவரது வீடு 7-வது வார்டில் ராமசந்திரா நகரில் உள்ளது.
ஜெயராமன் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் நேற்று மதியம் 2 மணி அளவில் ஜெயராமன் வீட்டிற்கு வந்தனர். அப்போது அங்கு அவர், குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். உள்ளே சென்ற போலீசார், மெயின் கேட்டு, வீட்டின் கதவுகளையும் உட்புறமாக தாழிட்டுக் கொண்டு தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையறிந்த அதிமுகவினர் வீட்டின் முன்பாக திரண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினர். போலீசாரின் சோதனை நேற்று இரவுவரையும் தொடர்ந்தது.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு நாள் விழா; பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்
15வது அமைப்பு தேர்தலுக்காக திமுக சார்பில் தேர்தல் நிர்வாகிகள் வேட்பு மனு
ஆவடி தொகுதியில் ரூ.24.5 லட்சத்தில் 13 புதிய மின்மாற்றிகள்; அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்
திருவள்ளூர் மருத்துவ கல்லூரியில் யாருக்கும் கொரோனா இல்லை; கல்லூரி முதல்வர் தகவல்
திருத்தணி முருகன் கோயிலில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.2.70 கோடி பணிக்கொடை
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்கல்வி பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்