முழு ஊரடங்கு காரணமாக மாநில எல்லை வரை இயங்கிய ஆந்திர பஸ்கள்: தமிழகத்திற்கு நடந்து வந்த பயணிகள்
2022-01-24@ 21:01:25

வேலூர்: உருமாறிய கொரோனா ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 3வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மாநில எல்லை சோதனை சாவடிகள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் என பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக தமிழக-ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியாக வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். இருப்பினும் சித்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வேலூருக்கு வந்த தனியார் பஸ்கள் காட்பாடி எல்லை வரை இயக்கப்பட்டது. சிறிது தொலைவு தூரம் நடந்து வந்த பயணிகள் தமிழக எல்லையில் இருந்த ஆட்டோக்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரும் பயண சீட்டுகளை வைத்து கொண்டு பயணம் செய்தவர்களை அனுமதித்தனர். சில பயணிகள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்ததால் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து ரயில்கள் மூலம் பயணம் மேற்கொண்டனர். ஆட்டோக்கள் போதுமான அளவு இல்லாததால் பெரும்பாலான பயணிகள் குழந்தைகளுடனும் நடந்து சென்றனர்.
மேலும் செய்திகள்
8.4 கிலோ போலி நகை மோசடி: ஆரணி கூட்டுறவு வங்கியின் நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு: மாவட்ட இணைப்பதிவாளர் அதிரடி
காரியாபட்டி அருகே 1,100 ஆண்டு பழமையான சமண பள்ளி கண்டுபிடிப்பு
தமிழக-கர்நாடக எல்லையில் காரை துரத்திய காட்டு யானை: உயிர் தப்பிய பயணிகள்
முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: இருதரப்பையும் சேர்ந்த 400 பேர் மீது வழக்குப்பதிவு
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம், ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கடியபட்டணத்தில் கடல் சீற்றம் அலை தடுப்பு சுவரில் தூக்கி வீசப்பட்ட பைபர் வள்ளம்: ஒரு வள்ளம் கடலில் மூழ்கியது
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!