பட்னாவிஸ், பிரமோத் சாவந்த் போல் உத்தரகாண்டில் இளம் தலைவரை தூக்கிவிடும் பாஜக: முட்டுக்கட்டை போடும் மூத்த தலைவர்களால் சிக்கல்
2022-01-24@ 17:45:23

டேராடூன்: மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ், கோவாவில் பிரமோத் சாவந்த் ஆகியோர் போல் உத்தரகாண்டில் இளம் தலைவரான புஷ்கர் சிங் தாமியை வளர்த்துவிட பாஜக தலைமை முடிவெடுத்த நிலையில், மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் உருவானதில் இருந்து பாஜகவும், காங்கிரசும் மாறி மாறி ஆட்சியை கைப்பற்றி வருகின்றன. முன்னாள் முதல்வர்கள் பி.சி.கந்தூரி (பாஜக), ஹரிஷ் ராவத் (காங்கிரஸ்) போன்றோர் கடந்த தேர்தலில் தோல்வியடைந்ததால், இந்த முறை இரண்டாம் தலைமுறை தலைவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் 46 வயதான புஷ்கர் சிங் தாமி கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
பாஜகவின் மத்திய தலைமையின் தலையீட்டால் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு புஷ்கர் சிங் தாமிக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டதாக பேசப்பட்டது. மாநில பாஜகவில் கோஷ்டி பூசல் அதிகரித்துள்ள நிலையில் இன்னும் 15 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் சட்டமன்றத் தொகுதியான கதிமா தொகுதியில் போட்டியிட சில மூத்த கட்சித் தலைவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் கடந்த தேர்தலின் போது காதிமா தொகுதியில் காங்கிரசின் புவன் சந்திர கப்டி 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அதனால் அந்த தொகுதிக்கு பாஜக மூத்த தலைவர்கள் குறிவைத்துள்ளனர். ஆனால் கட்சி தலைமையானது மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களை போன்று உத்தரகாண்டிலும் இளம் தலைவர்களை உருவாக்க முயற்சித்து வருகிறது. அதன்படி மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ், கோவாவில் பிரமோத் சாவந்த் ஆகியோர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் புஷ்கர் சிங் தாமியையும் கட்சி தலைமை முன்னிருத்தி வருவதாக தகவல்கள் தெரிவிகின்றன.
மேலும் செய்திகள்
காஷ்மீர் பண்டிட்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடிதம்..!
வாணி ஜெயராம் மறைவு இசை உலகிற்கு பெரும் இழப்பாகும்: பிரதமர் மோடி இரங்கல்
தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு லட்டு கிடைக்க நடவடிக்கை: தேவஸ்தான அதிகாரி தகவல்
சேலையால் கழுத்தை நெரித்து கணவனை கொன்ற மனைவி கைது
ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல்: மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கர்நாடக பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!