டெஸ்ட் கேப்டனாக கோஹ்லி 2 ஆண்டு தொடர்ந்திருக்கலாம்: ரவிசாஸ்திரி பேட்டி
2022-01-24@ 16:55:56

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக விராட் கோஹ்லி இன்னும் 2 ஆண்டுகள் தொடர்ந்திருக்கலாம் என முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் எளிதாகத் தொடரலாம் என்று நான் உணர்ந்தேன், ஆனால் இப்போது அவர் பதவி விலகியிருப்பதால், அவருடைய முடிவை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். அணியின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. ஏழெட்டு வருடங்களில் நான் பார்த்ததிலிருந்து, புதிதாக வரும் வீரர்களின் திறமைகள் ஆச்சரியமாக இருக்கிறது.
கேப்டனைப் பொறுத்த வரையில் ரோகித் சர்மா இரண்டு வடிவங்களில் கேப்டனாக இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போது இந்திய அணியை யார் வழிநடத்த வேண்டும் என்று கேட்டால், முதல் சாய்ஸ் ரோகித் சர்மாதான். ரிஷப் பன்ட் அற்புதமான வீரர். அவருக்கு நிறைய திறமை இருக்கிறது. தற்போது நியமிக்கப்பட்ட துணை கேப்டனை விட அவர் சிறந்த மாற்று, என்றார்.
மேலும் செய்திகள்
இங்கிலாந்துடன் 5வது டெஸ்ட் இன்று தொடக்கம்; தொடரை கைப்பற்றி சாதிக்க இந்தியா உத்வேகம்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி: 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு
சென்னையில் முதன் முறையாக மகளிருக்கான டென்னிஸ் போட்டி: செப். மாதம் நடைபெறும் என அறிவிப்பு
சில்லி பாயிண்ட்
இங்கிலாந்துடன் 5வது டெஸ்ட் ரோகித்துக்கு பதிலாக பும்ரா கேப்டன்
3வது சுற்றில் ஜோகோவிச்: கோன்டவெய்ட், ரூட் அதிர்ச்சி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்