ஒமிக்ரான் தொற்று பரவல் கொரோனாவுக்கு முடிவு கட்டும்!: 4வது அலை இந்தியாவில் இருக்காது என மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை..!!
2022-01-24@ 12:15:45

டெல்லி: ஒமிக்ரான் தொற்று பரவல் கொரோனாவுக்கு முடிவு கட்டும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் அமைதியாக, அதிவேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இது அரசுகளையும், மருத்துவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளனர். பெரும்பாலான தொற்றுகள் லேசான மற்றும் அறிகுறியற்றதாக இருந்தாலும் தற்போதைய அலையில் மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது அதிகமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தொற்றால் நன்மையும் ஏற்படக்கூடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஒமிக்ரான் அலையால் கொரோனாவே முற்றிலும் முடிவுக்கு வரும் என புனேவை சேர்ந்த பிரபல மருத்துவ நிபுணரான டாக்டர் நரேஷ் புரோகித் கூறியுள்ளார். தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான அவர், ஸ்பானிஸ் காய்ச்சலை போலவே கொரோனாவிலும் முதல் அலை லேசாகவும், இரண்டாவது அலை கொடூரமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது அலைக்கு பிறகு ஸ்பானிஸ் காய்ச்சல் மிகவும் லேசாக அதாவது சாதாரண ஜலதோஷம் போலவே மாறியதாக கூறினார். அதைப்போலவே கொரோனாவின் 3வது அலையும் இரண்டாவது அலையை விட லேசாகவும், அதிக பாதிப்பு இல்லாமலும் மாறியிருப்பதாக குறிப்பிட்ட அவர், இதற்கு பிறகு இந்தியாவில் 4வது அலை இருக்காது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை, பிஎப் திட்டத்திற்கு வழங்கும் பங்களிப்பு: அமலுக்கு வருகிறது புதிய தொழிலாளர் விதிகள்
இந்தியாவில் ஒரே நாளில் 17,070 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி... 23 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை
நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை
‘ஆதார்-பான்’ எண் இணைக்காவிட்டால் இன்று முதல் இரு மடங்கு அபராதமாக ரூ.1000 கட்ட வேண்டும்!!
ஒருபக்கம் போராட்டம்.. மறுபக்கம் குவியும் விண்ணப்பம்! .. அக்னிபாதை விமானப்படையில் சேர ஒரே வாரத்தில் 2.72 லட்சம் பேர் விருப்பம்!!
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தேர்தல் நிதி பத்திரங்கள் இன்று முதல் விற்பனை; ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்