நாடாளுமன்ற வளாகத்தில் வேகமாக பரவும் கொரோனா; நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா தொற்று
2022-01-24@ 10:00:36

டெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாடாளுமன்ற வளாகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு மொத்தம் 2,847 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 271 பேர் மாநிலங்களவையிலும் மற்றவர்கள் மக்களவையிலும் பணியாற்றுபவர்கள் ஆவர்.
இதனிடையே குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 15 மாதங்களில் 2வது முறையாக அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை தலைவர் மற்றும் பெருமளவு ஊழியர்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:
கொரோனாமேலும் செய்திகள்
பல்கலை. வேந்தர் ஆளுநர்தான் மாநில அரசுகள் பின்பற்றணும்: ஒன்றிய கல்வி அமைச்சர் பேட்டி
பினராயிக்கு எதிராக புகார் கூறியதால் சொப்னாவுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
ஆந்திராவில் சிலை திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம்: பாதுகாப்பு விதிமீறல் என குற்றச்சாட்டு
அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை
ஓட்டல் உணவுகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க கூடாது
இமாச்சல் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!