நெல்லூர் அருகே செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 55 பேரை கைது செய்தது ஆந்திர போலீஸ்
2022-01-24@ 08:32:06

சித்தூர் : ஆந்திர மாநிலம் நெல்லூரில் செம்மரம் வெட்டி லாரியில் கடத்த முயன்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் உட்பட 58 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். நெல்லூர் மாவட்டம் சின்னக்கூறு மண்டலம் புத்தானம் அருகே சென்னை - நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக வந்த லாரி மற்றும் காரை நிறுத்த முயன்ற போது, கடத்தல்காரர்கள் போலீசார் மீது லாரியை ஏற்றி தப்பிச் செல்ல முயன்றதாக தெரிகிறது. சுதாரித்த போலீசார் லாரியை சுற்றி வளைத்த போது, லாரியில் இருந்த கூலி தொழிலாளர்கள் போலீசார் மீது கோடாரிகளை வீசியதாக கூறப்படுகிறது.
இறுதியாக போலீசார் அந்த கடத்தல் வாகனங்களை மடக்கி 55 கூலி தொழிலாளர்கள் மற்றும் 3 கடத்தல்காரர்களை கைது செய்தனர். மேலும் லாரியில் இருந்த 36 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் 24 கோடாரிகள், 31 செல்போன்கள், ரூ.75,250 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த பெருமாள் வேலுமலை என்பவரது உத்தரவின் பேரில் இவர்கள் கடத்தலில் ஈடுபட்டதும் இவை அனைத்தும் சென்னைக்கு கொண்டு சென்று அங்கிருந்து சீனா, ஜப்பான் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகள்
ராணிப்பேட்டை ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்!!
கல்லூரி கனவு’ என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிக்காட்டி
பாதாள சாக்கடை பணிகளால் மீண்டும் சேதமடைந்த ஓஎம்ஆர் சாலை: சீரமைக்க கோரிக்கை
மதுராந்தகம் ஒன்றியம் முதுகரை கிராமத்தில் சேதமடைந்த ஏரி உபரிநீர் தடுப்பணை: புதர் மண்டிய கால்வாயையும் சீரமைக்க வலியுறுத்தல்
மாமல்லபுரம் பேரூராட்சியில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சூனாம்போடு அரசு பள்ளிக்கு ரூ.15 லட்சத்தில் நவீன கழிப்பறை
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;