கொரோனா 3வது அலை காரணமாக ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 60 சதவீதமாக சரிவு
2022-01-24@ 00:41:47

சேலம்: கொரோனா நோய் தொற்று 3வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால், வெளியூர்களுக்கு செல்வதை மக்கள் குறைத்துக் கொண்டுள்ளனர். இதன்காரணமாக கடந்த 10 நாட்களாக ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 60 சதவீதமாக குறைந்துள்ளது. வழக்கமாக வார நாட்களில் 80 முதல் 100 சதவீத பயணிகளும், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 100 சதவீத பயணிகளும் சென்று வந்தனர். ஆனால், இதுவே தற்போது முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் வார நாட்களில் 60 சதவீதத்திற்கு கீழ் தான் பயணிகள் பயணிக்கின்றனர்.
சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் ரயில்களில் மட்டும் வார இறுதி நாட்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோவை எக்ஸ்பிரஸ், கோவை இன்டர்சிட்டி, மங்களூரு எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், எழும்பூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் வார இறுதி நாட்களில் மட்டும் நிரம்பிச் செல்கிறது. மற்ற நாட்களில் 60 சதவீத பயணிகளே பயணிக்கின்றனர். கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், மக்கள் ரயில்களில் செல்வதை தவிர்த்துள்ளனர். இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த 10 நாட்களாக ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 60 சதவீதமாக சரிந்துள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும் மக்கள் பழையபடி பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்றனர்.
மேலும் செய்திகள்
அதிமுக பொதுக்குழுவில் பெரும் தொகை பட்டுவாடா: எடப்பாடிக்கு மெஜாரிட்டி கிடைத்த ரகசியத்தை அம்பலபடுத்தினார் புதுச்சேரி மாநில செயலாளர்
கைதி மாயம்: சேலம் சிறை அதிகாரியிடம் 3 மணி நேரம் விசாரணை
கூட்டுறவுத்துறையில் அதிமுக ஆட்சியில் ரூ780 கோடி முறைகேடு: அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
ரூ700 கோடி நில மோசடி வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படை
நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் தவித்த இலங்கை டாக்டருக்கு உதவிய திருச்செந்தூர் போலீஸ்காரர்: பாராட்டு குவிகிறது
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோர் காத்திருப்பு போராட்டம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்