பக்கத்து வீட்டு பெண் திட்டியதால் 8 வயது சிறுமி திடீர் தற்கொலை
2022-01-24@ 00:03:00

சென்னை: குன்றத்தூர் துரைசாமி முதலி தெருவை சேர்ந்தவர் சிவா(40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வசந்தி. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர்களுக்கு வைஷ்ணவி(13) என்ற மகளும், நவீன்(8) என்ற மகனும் உள்ளனர். வைஷ்ணவி, கோவூரில் உள்ள அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்துவந்தாள். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, வைஷ்ணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள். தகவலறிந்து வந்த குன்றத்தூர் போலீசார், உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
அதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம்பெண், வாலிபருடன் அடிக்கடி சந்தித்து ரகசியமாக பேசியதும், இதனை கண்ட வைஷ்ணவி, குடியிருப்பு வாசிகளிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், வைஷ்ணவியை திட்டியதால், மனைமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி சிறுமி தனது நோட்டில் கைப்பட எழுதி இருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:
Adjacent housewife scolding 8-year-old girl suicide பக்கத்து வீட்டு பெண் திட்டி 8 வயது சிறுமி தற்கொலைமேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 118 வளர்ச்சி பணிகள் நிறைவு: அதிகாரிகள் தகவல்
பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
மின்வாரிய குறைதீர் கூட்டம்
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி
சியுஇடி நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
பத்திரப்பதிவுத்துறையில் 12 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!