பயணிகளின் செல்போன், நகைகளை திருடிய மாஜி சிறப்பு காவல் படை வீரர் கைது
2022-01-24@ 00:02:55

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையில், எஸ்ஐ பாண்டியன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 6 சவரன் நகைகள் மற்றும் 2 செல்போன்கள் இருந்தன. விசாரணையில் அவர், அரக்கோணத்தை சேர்ந்த முன்னாள் சிறப்பு காவல் படை வீரர் செந்தில்குமார் (40) என்பதும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளிடம் நகை, பணத்தை திருடி வந்ததும் தெரிந்தது.
மேலும், திருடிய நகை மற்றும் செல்போன்களை மூர்மார்க்கெட்டில் விற்பதற்காக வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 6 சவரன் நகைகள் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். கைதான செந்தில்குமார் சிறப்பு காவல் படையில் பணிப்புரிந்தபோது பல்வேறு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டிருந்ததால், கடந்த 2009ம் ஆண்டு போலீஸ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆந்திரா, சென்னை போன்ற நகரங்களில் ரயில் பயணிகளிடம் தொடர்ந்து அவர் கைவரிசை காட்டி வந்தததும் குறிப்பிடத்தக்கது.
Tags:
Passengers cell phone jewelry stolen ex-Special Forces soldier arrested பயணிகளின் செல்போன் நகை திருடிய மாஜி சிறப்பு காவல் படை வீரர் கைதுமேலும் செய்திகள்
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை: தி.மலை போக்சோ சிறப்பு கோர்ட் தீர்ப்பு
ஆசைவார்த்தை கூறி பணம் பறிப்பு; திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பெண்ணின் கணவருக்கு ஆபாச வீடியோ: மனைவியை பிரிந்த வாலிபர் கைது
வியாசர்பாடி பகுதியில் கஞ்சா; புகைத்த 3 பேர் கைது
குடந்தை அருகே பதுக்கி வைத்திருந்த உலோக சாமி சிலைகள், பாவை விளக்குகள் மீட்பு: 2 பேர் கைது
வேலூர் அருகே காதலி மீது சந்தேகம் அடைந்து அவரை கத்தியால் குத்திய காதலன் கைது
நாகை அருகே இரு மீனவ கிராமங்கள் இடையே கடும் மோதல்: 2 கிராமங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் கைது
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!