கோவாவில் துண்டுகளாக உடையும் பாஜக: கட்சி தலைமை கலக்கம்..!
2022-01-23@ 13:44:36

பனாஜி: கோவாவில் பாரதிய ஜனதா கட்சியில் சிறிய சிறிய துண்டுகளாக உடைப்பு ஏற்பட்டு வரும் நிலையில் முன்னாள் முதலமைச்சரும் அந்த கட்சியின் மூத்த தலைவருமான லட்சுமிகாந்த் பர்சேகர் கட்சியில் இருந்து விலக போவதாக அறிவித்திருப்பது கட்சி தலைமையை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 64 வயதான லட்சுமிகாந்த் பர்சேகர் கோவாவின் மாண்ட்ரெம் தொகுதியில் 2002 - 2017 ல் எம்எல்ஏவாக இருந்தவர். அத்துடன் மனோகர் பாரிக்கர் மத்திய அமைச்சரவைக்கு அழைக்கப்பட்ட போது 2014 - 2017ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். ஆனால் இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் கடும் அதிருப்தி அடைந்துள்ள லட்சுமிகாந்த் பர்சேகர், தான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கோவாவில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் போட்டி வேட்பாளர்களாக களம் கண்டு தலைமைக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர். தனக்கு சீட் வழங்காததால் கடும் கோபம் அடைந்த பொதுப்பணித்துறை அமைச்சர் தீபக் புஷ்கர், தனது எம்எல்ஏ பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். கோவா துணை முதலமைச்சரின் மனைவியான சாவித்ரி கவ்லேகர் பாஜக மகளிரணி துணை தலைவர் பதவியில் இருந்து விலகினார். அத்துடன் சுயேட்சையாகவும் களம் காண்பதாகவும் அவர் அறிவித்தார். மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால், கட்சியில் இருந்து விலகியதுடன் சுயேட்சே வேட்பாளரானார். இது பாரதிய ஜனதாவை பெறும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகள்
நுபுர் சர்மாவை கொன்றால் வீடு பரிசு அஜ்மீர் தர்கா மதகுரு கைது
‘காளி’ போஸ்டர் குறித்து சர்ச்சை கருத்து பெண் எம்பி மொய்த்ரா மீது மபி. போலீஸ் வழக்குப் பதிவு: எதிர்ப்பு வலுத்ததால் திரிணாமுல் விளக்கம்
பஞ்சாப் முதல்வருக்கு இன்று 2வது திருமணம்
தடகள வீராங்கனை பிடி.உஷா உள்பட 4 பேர் தேர்வு இளையராஜாவுக்கு எம்.பி. பதவி: பிரதமர் மோடி வாழ்த்து
டிவி தொகுப்பாளர் கைது விவகாரம் உத்தர பிரதேசம், சட்டீஸ்கர் போலீசார் ஆடு புலி ஆட்டம்: ராகுல் விவகாரத்தால் பரபரப்பு
இறக்குமதி செய்த நிலை மாறியது பொம்மைகள் ஏற்றுமதி 61 சதவீதம் அதிகரிப்பு: மோடியின் திட்டத்தால் பலன்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!