ஜட்ஜ் ஐயா அறையில் பாம்பு: மும்பை ஐகோர்ட்டில் அலறல்
2022-01-23@ 12:45:07

மும்பை: மும்பை உயர் நீதிமன்ற வளாகத்தின் தரை தளத்தில் உள்ள நீதிபதியின் அறையில் பதுங்கியிருந்த 6 அடி நீளமுள்ள பாம்பு பிடிபட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர் நீதிமன்ற வளாகத்தின் தரை தளத்தில் உள்ள நீதிபதி அமித் போர்க்கரின் தனி அறையில் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதையறிந்த நீதிமன்ற ஊழியர்கள் அந்த பாம்பை பிடித்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து நீதிமன்ற ஊழியர்கள் கூறுகையில், ‘நீதிபதியின் அறையில் பதுங்கியிருந்த பாம்பு விஷமுள்ளதா? என்பது தெரியவில்லை. அந்த பாம்பை பிடிப்பதற்காக பாம்பு பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் நீதிபதியின் அறையில் இருந்த பாம்பை பிடித்து சென்றனர்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த சிலர் தங்களது செல்போனில் புகைப்படங்களை எடுத்தனர். நீதிபதியின் அறையில் பாம்பு பிடித்த செய்தி இணையத்தில் வைரலாக பரவியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இம்மாதம் முழுவதும் மும்பை உயர் நீதிமன்றம் காணொலி காட்சி மூலம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால், நீதிமன்ற வளாகத்திற்குள் சுற்றித்திரிந்த பாம்பு, நீதிபதியின் அறைக்குள் புகுந்துள்ளது’ என்று அதிர்ச்சியுடன் கூறினார்.
மேலும் செய்திகள்
சிரஞ்சீவியின் காட்ஃபாதர் வீடியோ ரிலீஸ்
பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரம் இயக்குனர் லீனா மீது நடிகை கடும் தாக்கு: கனடாவில் உள்ள இந்திய தூதரகமும் கண்டனம்
பவன் கல்யாண் பெயரை பச்சை குத்திய நடிகை
அல்லு அர்ஜுனுடன் இணைகிறார் விஜய் சேதுபதி
துணை ஜனாதிபதி தேர்தல் மனுதாக்கல் தொடங்கியது: ஆக.6ம் தேதி வாக்குப்பதிவு
குடும்ப சுமையால் வெளி உலகத்தையே பார்க்காதவர் தாயை 56 ஆயிரம் கிமீ ஆன்மிக பயணம் அழைத்து செல்லும் மகன்: திருப்பதியில் சுவாமி தரிசனம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!