தமிழகத்தில் 2.93 கோடியில் 6 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
2022-01-23@ 00:32:41

சென்னை: தமிழகத்தில் ரூ.2 கோடியே 93 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 6 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.2021-22ம் ஆண்டிற்கான மனித வள மேலாண்மை துறையின் மானிய கோரிக்கையில், புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய வருவாய் மாவட்டங்களில் 6 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 வருவாய் மாவட்டங்களில் ரூ.2 கோடியே 93 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விழிப்புப்பணி மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) சிவ்தாஸ் மீனா, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் இயக்குநர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிரிழப்பு; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,658 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!
சென்னையில் ஜூலை 8-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
படிக்கும் காலத்தில் அரசியல் உணர்வோடு வளரவேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்
தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விபரீதம்; மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
கூடுவாஞ்சேரி அருகே மறியல் போராட்டத்தால் பரபரப்பு, டாரஸ் லாரி மோதி பெண் பலி; 30 அடி தூரத்துக்கு இழுத்து சென்ற அவலம்
தந்தை நினைவாக வைத்திருந்த வைரக்கல் பதித்த ரூ1.50 லட்சம் மதிப்புள்ள தங்கப்பேனா திருட்டு: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!