தமிழகத்தில் இயல்பை விட 59% கூடுதல் மழை பதிவு வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது
2022-01-23@ 00:31:31

* அதிகபட்சம் விழுப்புரம்
* குறைந்தபட்சம் ராமநாதபுரம்
சென்னை: தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.தமிழகத்தில் 2021ம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை தாமதமாக அக்டோபர் 25ம் தேதி தொடங்கியது. சென்னை, கன்னியாகுமரி, திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து டிசம்பர் மாதம் இறுதியில் மழையின் அளவு குறைந்தது. சென்னையை பொறுத்தவரை பொங்கல் நேரத்தில் மட்டும் மழை பெய்தது. அதன் பிறகு மழையின் அளவு குறைந்து வெயில் அடிக்க தொடங்கியது. இந்நிலையில் 2021ம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை நேற்றுடன் நிறைவு பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த காலக்கட்டத்தில் (டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி) தமிழகத்தில் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் இயல்பான அளவு 449.7 மி.மீ. தான். ஆனால், தற்போது வரை 714.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் இயல்பை விட 119 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது. சென்னையில் 74 சதவீதமும் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் இயல்பை விட 13 சதவீதம்அதிகமாக மழை பதிவாகியுள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மையம் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை இன்று (நேற்றுடன்) தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராமசீலா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகியது. இன்று முதல் 26ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
அண்ணாநகர் மண்டலத்தில் 400 பேருக்கு கொரோனா: தடுப்பு பணிகள் தீவிரம்
கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சொத்து வரி செலுத்த சிறப்பு ஏற்பாடு: மாநகராட்சி தகவல்
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 26 செயற்கை நீரூற்றுகள்: வெளிநாடுகளில் உள்ளதைப்போல் ரம்யமான காட்சி; சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கின்றனர்
தொழிலதிபர் மீது வழக்கு ஸ்ரீபெரும்புதூர் போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுநீரக ஆபரேஷன் செய்தவர்களில் 99 சதவீதம் பேர் நலமாக உள்ளனர்: அதிகாரி தகவல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்