6 மாதத்தில் மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலப் பணி : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
2022-01-23@ 00:26:09

சென்னை: கடந்த பருவமழையின்போது சென்னை மதுரவாயல் அருகே நொளம்பூர் செல்லும் வழியே கூவம் ஆற்றை கடக்க முயன்ற 3 பேர் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, இரண்டு தரைப்பாலங்களையும் தற்போது உயர்மட்ட மேம்பாலமாக மாற்ற அரசு முடிவு செய்தது. இந்த பணிகள் குறித்து மதுரவாயல், நொளம்பூர் கூவம் ஆற்றுப் பகுதியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:இந்த பாலத்தை உயர்த்தி அகலப்படுத்தி கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பாலம் மாநகராட்சி கட்டுப்பாட்டிலும், ஒரு பாலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. இரண்டு பாலங்களின் பணிகளை மாநகராட்சி எடுத்து செய்ய உள்ளது. 140 மீட்டர் அகலம் கொண்டது இந்த பாலம். மேலும் கூவம் ஆற்றின் கரையை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 6 மாதத்தில் பாலம் கட்டும் பணி முடிக்கப்படும் என்றார்.அப்போது, எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம்: சென்னை பெருநகர போக்குவரத்து காவல் விழிப்புணர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 13 பின்பிரிவு உதவி பொறியாளர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு
சென்னையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்: தொடரும் பேச்சுவார்த்தை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ120.75 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
204-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த எழும்பூர் அரசு கண் மருத்துவமனை
பணியிடத்தில் உயிரிழந்த கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிவாரணத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!