பெரம்பலூர் தனியார் அரிசி ஆலையில் அரிய வகை வெள்ளை ஆந்தை குஞ்சுகள்-வனத்துறையிடம் ஒப்படைப்பு
2022-01-22@ 14:22:52

பெரம்பலூர் : பெரம்பலூர் தனியார் அரிசி ஆலையில் இருந்த அரிய வகை வெள்ளை ஆந்தையின் 4 குஞ்சுகள் வனத்துறையிடம் ஒப்படைப்படைக்கப்பட்டது.
பெரம்பலூர் துறையூர் சாலையில் கல்யாண் நகர் பகுதியில் தனியார் அரிசி ஆலை உள்ளது. இதில் அரவை பணிகள் தற்போது நடைபெறவில்லை. இங்குள்ள அரிசி ஆலை வளாகத்தில் குளிர்ச்சியான பகுதியில் வசிக்கக்கூடிய வெள்ளைநிற ஆந்தையின் 4 குஞ்சுகள் இருப்பது தெரியவந்துள்ளது. தாய் பறவையை காணவில்லை.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில், பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ், பெரம்பலூர் வனச்சரகர் சசிக்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில், வனக்காப்பாளர் அன்பரசுவிடம் அந்த ஆந்தை குஞ்சுகளை ரைஸ்மில் ஊழியர்கள் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து 4 ஆந்தை குஞ்சுகளும் அருகிலுள்ள குரும்பலூர் காப்புக்காடு பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டது.
இதுகுறித்து பெரம்பலூர் வனச்சரகரிடம்கேட்ட போது, இது சாதாரண வகை ஆந்தைதான். தாய் பறவை வெளியே சென்று விட்டது. நீண்டநாள் பயன்படுத்தாமல் இருந்த அறையில் குஞ்சு பொறித்து, வசித்து வந்துள்ளது. கோட்டான் வகை ஆந்தைகள்தான் நமது பகுதிகளில் அதிகம் இருக்கும். இதுவும் பச்சைமலை களில் குளிர்ச்சியான பகுதிகளில் காணப்படும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
கோவையில் ருசிகரம் துவக்கப்பள்ளியில் மாணவர் தேர்தல்
ஆர்டிஐயின் கீழ் ஆதீனங்கள் வராது: ஐகோர்ட் கிளை உத்தரவு
திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் இரும்புத்துண்டு குருவாயூர் எக்ஸ்பிரசை கவிழ்க்க சதித்திட்டமா? ரயில்வே போலீசார் விசாரணை
5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை பணியாளர்கள் போராட்டம்
கீழ்மணம்பேடு அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் கலெக்டர் ஆய்வு
12 ஊராட்சிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க மோட்டார்கள்: எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!