குட்டத்துப்பட்டி ஊராட்சியில் மேல்நிலை தொட்டியிலிருந்து வீணாக வெளியேறும் குடிநீர்-குழாய் உடைப்பை சீரமைக்க மக்கள் கோரிக்கை
2022-01-22@ 14:01:40

சின்னாளபட்டி : குட்டத்துப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மேல்நிலை தண்ணீர் தொட்டியில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சியில், குட்டத்துப்பட்டி, குட்டத்து ஆவாராம்பட்டி, வெயிலடிச்சான்பட்டி, நாச்சகோனான்பட்டி, புளியராஜக்காபட்டி, காலாடிபட்டி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. குட்டத்துஆவாரம்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே சமுதாய கூடம் முன்பு மேல்நிலைதண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை முறையாக பராமரிக்காததால் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக தெருவில் ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு முறையாக குடிதண்ணீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊராட்சி செயலாளர் பிளவேந்திரராஜிடம் பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து மேல்நிலை தண்ணீர் தொட்டியில் உள்ள குழாய் உடைப்புகளை சரி செய்ய ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்!: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
ஆவடி அமமுக செயல்வீரர்கள் கூட்டம்; ஓபிஎஸ்சை ரகசியமாக சந்திக்க அவசியம் இல்லை.! டிடிவி.தினகரன் பேட்டி
பொதுத்துறை நிறுவனங்களை விற்பது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்; முத்தரசன் எச்சரிக்கை
மணப்பாறை நீதிமன்றத்தில் தொந்தரவு கொடுத்து வந்த குரங்குகள் கூண்டில் சிக்கின-பணியாளர்கள், பொதுமக்கள் நிம்மதி
துறையூர் அடுத்த பச்சைமலையில் மரவள்ளிக்கிழங்கு, முந்திரி சாகுபடி குறைவால் வாழ்வாதாரம் பாதிப்பு-மழைவாழ் மக்கள் வேதனை
திருப்பத்தூர் மாவட்டத்தில் ₹7 கோடியில் 6 கோயில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யும் பணிகள் தீவிரம்-இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தகவல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!